2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கும் நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 29 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பாவனை செய்து அகற்றிய இலத்திரனியல் கழிவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கை கரைத்துறைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது.

தேசிய மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் கடந்த திங்கட்கிழமை (26) முதல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றுத. 
இதன் ஒரு நிகழ்வாகவே இந்த இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம், இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் துரைஐயா சுபோகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் நடவடிக்கை நேற்று புதன்கிழமை (28) கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X