2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்தவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த சந்தேகநபர் ஒருவருக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (13) உத்தரவிட்டார்.

மேற்படி நபர், கிளிநொச்சி பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 13 போத்தல் கசிப்பு மற்றும் சோடா என்பன கைப்பற்றப்பட்டன.
 
தொடர்ந்து, அந்நபர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (13) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் 3 போத்தல் கசிப்புடன் ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் நீதவான் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .