2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கடன் உதவி பெற்றுக்கொள்ளுதல் தொடர்பில் ஆலோசனை

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டங்கள்  மற்றும் தொழில் பற்றிய ஆலோசனைகள் வழங்கும்  நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) கரைத்துறைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ரஜனிகாந்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சிவனேசராஜா உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கைத்தொழிலை ஊக்குவிப்பதற்கு தேவையான ஆலோசனைகள், வியாபாரத்தை பதிவு செய்தல், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன்களை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், 50 க்கும் அதிகமான கைத்தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .