2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் தேக்குமரக்கடத்தல்கள்; அதிகரிப்பு

George   / 2015 ஜனவரி 01 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காடுகளில் தேக்கு மரங்கள் அனுமதிப்பத்திரமின்றி வெட்டப்பட்டு கடத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸார், வியாழக்கிழமை (01) தெரிவித்தனர்.

தேக்கு மரங்களை வாகனங்களில் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

கடந்த 30ஆம் திகதி 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 3 தேக்கு மரக்குற்றிகளை கன்ரர் ரக வாகனத்தில் கடத்திச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை, நீதவான் எம்.ஐ.வகாப்தீன் 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

மேலும், கடத்தப்பட்ட தேக்குமரம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .