George / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொ.சோபிகா
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் அனுச்சியம் குளம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் 30 மில்லியன் ரூபாய் செலவில் பாற்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், சனிக்கிழமை (31) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள முதலாவது பாற்பண்ணை இதுவாகும். இங்கு முதற்கட்டமாக பிற மாவட்டங்களில் இருந்து 25 நல்லின பசுக்களை கொண்டு வந்து அவற்றின் கன்றுகளை பண்ணையாளர்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
அவற்றில் இருந்து பெறப்படும் பாலை துணுக்காய் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பால் பதனிடும் சங்கத்திற்கு கொடுத்து வருகின்றோம்.
இந்த வருடம் இந்த பால் பாற்பண்ணையில் பால் பதனிடும் திணைக்களம் அமைப்பதோடு பால் உற்பத்திப் பொருட்களை தயாரித்து விநியோகிக்கவுள்ளோம்.
அத்துடன் இங்கு பண்ணையாளர்களுக்கு செயல்முறை பயிற்சிகள் வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
11 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
59 minute ago
1 hours ago