Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 16 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியாவில் 18ஆம் திகதி காலை 9 மணிக்கு அனுஸ்டிக்கப்படவிருந்த முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகளை, 18 ஆம் திகதி மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானித்துள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கே. தேவராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் காலை நடத்தப்படவிருந்ததது.
எனினும், அன்றைய தினம் காலை முள்ளிவாய்க்காலில், வட மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து நினைவு தினத்தை அனுஸ்டிக்கவுள்ளமையினால் வவுனியாவில் காலை 9 மணிக்கு நடத்த திட்டமிட்டிருந்த நிகழ்வு மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, யுத்தத்தில் இறந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அன்றைய தினம் அனைவரையும் அழைப்பதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
44 minute ago
1 hours ago