2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஜூலை 04 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை அமைப்பதுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (02) இடம்பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் வி.ஜயதிலகவின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்தநிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்சாத் ரஹ்மதுல்லாஹ், மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.அமீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கைத்தொழில் பேட்டையின் முதற்கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களையும் அடுத்த (2016) வருடம் டிசெம்பர் மாதமளவில் மேலும் ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை,  கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி மற்றும் முதலீடு தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இப்பிரதேசத்துக்கு முதலீட்டாளர்களையும் அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் பல நிறுவனங்களுடன் பேச்வார்த்தையும் நடத்த திட்டமிட்டுள்ளார் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .