Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2017 ஜூலை 19 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கண்டாவளைக் கிராமத்துக்கு பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள், போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
2010ஆம் ஆண்டின் பின்னர், இக்கிராமத்துக்கான பஸ் சேவைகள் கிளிநொச்சி நகரத்தில் இருந்து நடைபெற்றதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராமத்துக்கான பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக, இக்கிராமத்தில் இருந்து, இரண்டு கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் நடந்து வந்து ஏ-35 சாலையில் பயணிக்கும் பஸ்களில் மக்கள் பயணிக்க வேண்டி உள்ளதாகவும் குறிப்பாக பிற இடங்களில் இருந்து கண்டாவளை மகா வித்தியாலயத்துக்கு பணிக்கு வரும் ஆசிரியர்கள் கண்டாவளைச் சந்தியில் இருந்து முச்சக்கர வண்டிகளில் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போக்குவரத்து நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, பஸ் சேவைகளை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 minute ago
11 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
31 minute ago
1 hours ago