Niroshini / 2021 ஜூலை 27 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - மலையாளபுரத்தில், இன்று (27) காலை, 45 போத்தல் கசிப்பு போத்தல்களுடன், இருவர் மாவட்ட பொலிஸ் விசேடமது ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்ட நிலையில்,இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது ஒருவரிடம் 25 போத்தல் கசிப்பும், மற்றைய நபரிடம் 20 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டன.
இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .