Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
மாந்தைக் கிழக்கில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக, நாள்தோறும், 75 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக, மாந்தைக் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், மாந்தைக் கிழக்கில், 2,800 வரையான குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், கடும் வரட்சி காரணமாக, கிணறுகளின் நீர் மட்டம் அடிநிலையைச் சென்றடைந்துள்ளதாகவும் இதனால், கிணறுகளை ஆழப்படுத்தித் தாருமாறு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
3 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago