Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்துக்காக நீர் திறந்து விடப்பட்டு 98 ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் இன்று (15) இடம்பெற்றன.
இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட வழிபாட்டில், இரணைமடுகுளத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுப்படுகின்ற கமக்கார அமைப்புக்கள் 98 பானைகளில் பொங்கி விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் எஸ்.ஆயகுலன், நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் என்.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago