Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவரது இரக்க சுபாவத்தைச் சிலர் பலவீனமானவர் என்றும் ஏமாளி என்றும் எண்ணுவதுண்டு.
யுத்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று‚ அன்று ஊரே மயானம்போல் வெறிச்சோடிப் போயிருந்தது. வீதியில் செல்ல முடியாத நிலை. தொலை தூரத்துக்குச் செல்ல வேண்டியவர்கள் தங்குவதற்கு இடம் தெரியாமல் விழி பிதுங்கியிருந்தனர்.
அந்த வீதியில் இரண்டு நண்பர்கள் பயந்தவாறே நடந்து வந்துகொண்டிருந்தனர். திடீரென வீதியில் வந்த ஒரு வாகனம் அவர்களைக் கடந்து மீண்டும் திரும்பி வந்தது. உள்ளே இருந்த ஒருவர் தனது நண்பர் வந்ததைக் கண்டதுமே வாகனத்தை நிறுத்தி, உடனே ஏறுங்கள்; ஓர் இருக்கை மட்டுமே உள்ளது என்றார்.
ஆனால் அவரோ, நான் எப்படியோ சமாளிப்பேன். எனது நண்பரை எனக்காக ஏற்றிச் செல்லுங்கள் என்று வற்புறுத்தி அதில் ஏற்றி விட்டார்.
சிலநாட்களின் பின்னர் வாகனத்தில் ஏற்றப்பட்ட நண்பர், நண்பரைக் கேலியுடன், நான் சுகமாக வந்து விட்டேன். உனக்குத்தான் ஒன்றும் தெரியாது என்றார்.
இரக்கம் பலவீனம் அல்ல; பலம்!
வாழ்வியல் தரிசனம் 22/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago