Editorial / 2018 மார்ச் 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவரின் விதி பலராலும் வரையப்படுகிறது. யார்யாரோ இடையில் புகுந்து கொள்கின்றார்கள். தாய், தந்தை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, முகம் தெரியாத நபர்கள் கூட, தனி மனிதனின் வாழ்க்கையில் புகுந்து, நல்லதையோ அல்லது அல்லாததையோ செய்து முடிக்கின்றனர்.
சுயமாக ஒருவன் தனது சுயபுத்தியில் வாழ்ந்தாலும் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு, சொல்லாமல் கொள்ளாமல் உள்நுழைந்து விடுகின்றது.
தங்கள் அறிவின்படி, கடமையை விட்டு விலகாமலும் நேர்மையே ஒரே சீரானவழி என்று உறுதியாக நின்றால், விதி அவர்கள் சொற்படி நடந்தே தீரும். சந்தேகமே வேண்டாம்.
முதலில் நீங்கள், உங்களைச் செதுக்கும் உளவலிமையைப் பெறுவீர்களாக.பெற்றோர், உற்றோர், மற்றையோர்களுக்கும் உரிய மரியாதைகளை மனமுவந்து வழங்குக.
எதற்கும் விதியை மட்டும் காரணம் சொல்லற்க. உங்களை நீங்களே வசப்படுத்துக.
வாழ்வியல் தரிசனம் 23/03/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago