Editorial / 2018 ஜனவரி 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்கள் வாழும் இல்லம் வீடு. இங்கு மனிதர்கள் மட்டும் வாழ்வதில்லை.
கிராமங்களில் ஆடு, மாடு, கோழி, பட்சிகள், பிராணிகள் என எத்தனையோ வீட்டைச் சுற்றியும் அருகே அமைந்த வீட்டு முற்றத்து மரம் செடிகளில் மிக மகிழ்ச்சியாகச் சப்தமிட்டபடி தங்கள் இருப்புகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும்.
வீடுகளில் முதியவர்கள் தங்களுக்கு மட்டும் உணவு தேடுவதில்லை. காக்கை, குருவி, ஈ, எறும்புகளுக்கும் உணவுகளை வழங்கி வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பசு, ஆடு, கோழி எனப் பலவற்றுக்கும் புல், குழை, அரிசி, தானியம் என்பவற்றை அன்புடன் கொடுப்பதே மிக அழகான காட்சிதான். ஆனால், இவைகளை நாம் கிராமங்களில்த்தான் காணமுடியும்.
இல்லங்களில் எந்த நிகழ்வுக்கும் பிராணிகளைக் கவனிக்காமல் விடமாட்டார்கள். ஏழைகள் கூட, இந்த விடயத்தில் விலைவாசி குறித்துக் கவலைப்படுவதேயில்லை.
ஆனால், நகரில் ஒருவர் வீட்டுக்குச் சொல்லாமல் அறிவிப்பு இன்றிப் போக முடியாது; அநேகர் வீட்டுக்குள் இருப்பதுமில்லை. பலதரப்பட்ட கருமங்கள் அவர்களுக்குண்டு. உறவுகளை மறக்கும் காலம் இது.
வாழ்வியல் தரிசனம் 03/01/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025