Editorial / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செய்கின்ற தர்மத்தை பிறர் அறிய வேண்டும் எனக் கருதுவது பூரணமானது அல்ல.
அரசாங்கத்தின் பணத்தில் மலசல கூடத்தைக்கட்டி, அதன் வாயிலில் தங்களது குடும்பப் படங்களை போட்டு, விளம்பரம் தேடும், அரசியல் தலைவர்களைக் கொண்டது எமது நாடு.
மிகப்பெரும் மக்கள் நலத்திட்டங்களை எந்தவித ஆடம்பரமும் இன்றி, மேலைத்தேய நாடுகளில் உள்ள தலைவர்கள் செய்து வருகின்றார்கள். மக்கள் சும்மா எதையும் கேட்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே வரி வழங்கும் வள்ளல்கள்.
ஒரு சின்ன ரொட்டி வாங்கும்போதும், மறைமுக வரிமூலம் பறிக்கப்படுவது மக்களின் பணம்தானே? இப்படியிருக்கப் பெரிய திட்டங்களைச் செய்யாமல் முடக்கிவிட்டு, சாதாரண அற்ப விடயங்களையே சொல்லிக் காட்டுவது, என்ன நியாயம் சொல்லுங்கள். அரசியல் வாதிகள் பலருக்கு வெக்கமும் இல்லை, ரோசமும் இல்லை, மக்கள் பற்றிய கவலையும் இல்லை.
வாழ்வியல் தரிசனம் 30/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026