Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Gavitha / 2016 மார்ச் 09 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
'என் மனைவி என்னை விட்டு பிரிந்து செல்லப்போவதாக அறிவித்து விட்டார். இதனால் நான் ஓட்டும் விமானத்தை எங்காவது மோத விட்டு, விமானத்திலுள்ள 200 பேரை கொலை செய்து விட்டு நானும் செத்துவிடுவேன்' என்று விமானியொருவர் அதிரடி மிரட்டல் விட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமிலிருந்து ஜப்பானை நோக்கி பயணிக்க தயாராக இருந்த விமானத்தில் சுமார் 200 பயணிகள் இருந்தனர்.
அந்த விமானத்தை ஓட்ட 40 வயது விமானி நியமிக்கப்பட்டிருந்தார். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு, குறித்த விமானத்தின் விமானியொருவர் அலைபேசி மூலம் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக அறிவித்து விட்டாள். இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன். விமானத்தை எங்காவது மோதி அதிலுள்ள 200 பேரையும் கொலை செய்துவிட்டு, நானும் செத்துவிடுவேன்' என்று எழுதப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை ரோம் நகரில் உள்ள பியூமாசினோ விமான நிலையத்தில் இருந்து புறப்படவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் தற்கொலை மிரட்டல் விடுத்த விமானியை விமானத்தில் இருந்து இறக்கினர். அவருடன் இருந்த மற்றொரு சக விமானி விமானத்தை ஓட்ட அனுமதித்தனர். இதன் மூலம் நடைபெற இருந்த மிகப்பெரிய சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
11 May 2025