2025 மே 14, புதன்கிழமை

ஆஞ்சநேயர் முகத்தையொத்த வண்ணாத்திப்பூச்சி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


ஹட்டன், செனன் தோட்டத்திலுள்ள வீடொன்றின் கூரையில் ஆஞ்சநேயர் முகத்தையொத்த வண்ணத்திப்பூச்சியொன்று நேற்று சனிக்கிழமை காணப்பட்டது. 

இத்தோட்டத்திலுள்ள மருதமுத்து சுப்பையா என்பவரின் வீட்டுக் கூரையிலேயே ஆஞ்சநேயர் முகத்தையொத்த இவ்வண்ணத்திப்பூச்சி காணப்பட்டது.

வீட்டுக் கூரையில் வித்தியாசமான பூச்சியொன்று காணப்படுவதைக் கண்ட அவ்வீட்டு உரிமையாளர், இது தொடர்பில் ஊர் குருக்களுக்கு தெரியப்படுத்தினார். அவர்  ஆஞ்சநேயர் முகத்தையொத்த இவ்வண்ணத்திப்பூச்சியை வீட்டிலுள்ள சுவாமி படங்களின் முன்வைத்தார்.

இவ்வண்ணத்திப்பூச்சியின் தலையில் ஆஞ்சநேயரின் முகம் மிகத் தெளிவாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வண்ணத்திப்பூச்சியை அதிகளவான மக்கள் பார்வையிட்டுவருகின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • Nanpan Sunday, 04 November 2012 06:50 AM

    ஏன் சொல்லமாட்டீங்க... இதுக்கும் ஒரு கோவில கட்டி கும்பிடுங்க...
    நீங்கல்லாம் நல்லா வருவீங்க.

    Reply : 0       0

    மாயாவி Monday, 19 November 2012 09:06 AM

    உங்க பக்தி பரவசத பார்த்து வியந்தேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X