2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முன்னாள் கடற்படைத் தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு

Simrith   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகெதென்ன மற்றும் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் மொஹொட்டி ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் உதும்பர தசநாயக்க உத்தரவிட்டுள்ளார். 

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பாக உலுகேதென்ன ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். 

காணாமல் போனது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், செப்டம்பர் 18 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மொஹோட்டி கைது செய்யப்பட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .