A.P.Mathan / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெரிவுகாண் போட்டிகள் மூன்று நாட்களில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் இறுதி தொடர் இம்மாதம் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. 23 போட்டிகள் மொத்தம் நடைபெறவுள்ளன. இந்தியாவில் இருந்து நான்கு அணிகள் பங்கு பற்றுகின்றன. இரு குழுக்களிலும் இரு அணிகள் இடம்பிடித்துள்ளன. குழு Aஇல் டெல்லிடெயாடெவில்ஸ், கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடம்பிடித்துள்ளன. குழு Bஇல் சென்னை சுப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. தென் ஆபிரிக்க அணிகளான ரைரன்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ் அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. இதில் ரைரன்ஸ் அணி குழு A இலும், ஹைவெல்ட் லயன்ஸ் அணி குழு Bஇலும் பங்கு பற்றுகின்றன. அவுஸ்திரேலியா சார்பாக பேர்த் ஸ்க்கொச்சேர்ஸ் அணி குழு A இலும், சிட்னி சிக்செர்ஸ் அணி குழு B இலும் பாம்கு பற்றுகின்றன. நியூசிலாந்தின் ஒக்லண்ட் ஆஷஸ் அணி குழு A இலும், இங்கிலாந்தின் யோர்க்க்ஷெயர் அணி குழு B இலும் இடம் பிடித்துள்ளன.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago