Janu / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, ஆசியரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி பாடசாலை வாயிலின் முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
செட்டிக்குளம், அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தரம் 03ம் வகுப்புக்கான ஆசிரியரானது கடந்த 10மாதங்களாக நியமிக்கப்படாமையால் மாணவர்களின் கல்வி கேள்விக்குரியாகியுள்ளதாக தெரிவித்த, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் பாடசாலை வாயிலிற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணித்தியாலயமாகியும் தீர்வு கிடைக்காத நிலையில் தமக்கான தீர்வாக குறித்த வகுப்பிற்கான நிரந்தர ஆசிரியரினை நியமிக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர்.
க. அகரன்


1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025