2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Janu   / 2025 ஜூன் 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, திருமுறிகண்டி பிரதேசத்தில்  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, இரணைமடு விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  இரகசிய தகவலின் அடிப்படையில், மாங்குளம் பொலிஸ் நிலைய சிறப்புப் படை அதிகாரிகளால், திருமுருகண்டி பகுதியில் நடத்திச் சென்ற  ஒரு இனிப்புக் கடையை சோதனையிட்ட போது  கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் ​பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X