2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

R.Tharaniya   / 2025 ஜூன் 29 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற நபர் சனிக்கிழமை (28) அன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆனந்தாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையேவெள்ளிக்கிழமை (27)அன்று அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார்.

வழமையாக காலை 9.00 மணியளவில் கரை திரும்பும் குறித்த மீனவர் அன்று கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்ற வேளை ஆளின்றி அவர் பயணித்த கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது. 

இதனை அவதானித்த தேடிச் சென்ற மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கட்டுமரத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரண்டு நாளும் சடலம் கண்டுபிடிக்கப்படாத. நிலையில் சனிக்கிழமை (28) அன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X