R.Tharaniya / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசு சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலைகட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த கோரி போராட்டம்.
அரசுசட்டவிரோதமான மீன்பிடித் தொழிலைகட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த கோரிமுல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனைகட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாககடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட இழப்பு பகுதிகளில் சட்டவிரோத தொழில் களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது
இந்நிலையில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று அண்மையில் தீக்கிரியாக்கப்பட்டுள்ளது இந்நிலையில் சட்டவிரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடுகின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துமாறு கோரியேகுறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
சண்முகம் தவசீலன்









07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026