2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புகையிரத கடவையை கடக்க முயன்ற இளம் குடும்பஸ்தர் பலி

R.Tharaniya   / 2025 மே 26 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை  இயங்கிய போதும் சமிக்கை ஒலியை பொருப்படுத்தாமல் புகையிரத கடவையை கடக்க முயன்றவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தினால் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறிவியல் நகர் செல்லும் வீதியில்
பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிபயணித்த அதிசொகுசு புகையிரதத்தில்  ஞாயிற்றுக்கிழமை (25) அன்று மோதி உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்தில் பொன்னழகு அனுசன் ராஜ் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

முருகையா தமிழ்செல்வன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X