2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில்.காற்றுடன் கூடிய மழை

R.Tharaniya   / 2025 ஜூன் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று மாலை திடீரென கடும் காற்றுடனான மழை வீழ்ச்சி பதிவானது.

கடும் காற்றால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அத்துடன், மின்சாரமும் சில இடங்களில் தடைப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் சிரமங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டனர்.

இதனால், ஞாயிற்றுக்கிழமை (22) அன்று யாழ். நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் இடைநிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X