Janu / 2025 ஜூன் 05 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, கொக்குவெளி பகுதியில் வீடொன்றின் வளவில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் புதன்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்ட பகுதியில் முதலையொன்று இருப்பதை அவதானித்த, வீட்டின் உரிமையாளர் , அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை விழுந்துள்ளது.
இதையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய பின்னர் குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கிணற்றில் இருந்து முதலையை பிடித்துச் சென்றிருந்தனர்.
க. அகரன்


4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago