R.Tharaniya / 2025 மார்ச் 17 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் இடம்பெற்ற Top 100 விருது வழங்கும் விழாவில் காரை தீவைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி கிருபாஞ்சனா கேதீஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டுடன் தினகரன் பத்திரிகையின் அனுசரனையுடன் கண்டியில் இடம் பெற்ற Top 100 எனும் விருது வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார். காரைதீவை சேர்ந்த திருமதி. கிருபாஞ்சனா கேதீஸ் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக, சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.
அந்நிகழ்ச்சியில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள்,இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என 100 பிரபலங்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்விற்கு மத்திய மாகாண முன்னாள் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
வி.ரி. சகாதேவராஜா

18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026