Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண புதிய கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், நேற்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து பட்டிருப்பு கல்வி வலய உத்தியோகத்தர்களால் பணிப்பாளர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த வைபவத்தில் பட்டிருப்பு வலக் கல்வியலுவலக நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் உட்பட வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026