Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(ஆர்.அனுருத்தன்)
	
	மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள காங்கேயனோடையில் ஈரான் உதவியுடன் அமைக்கப்படும் வீடு அமைப்பு திட்டத்தில் தமிழர்களுக்கும் ஒரு தொகுதி வீடுகள் வழங்கப்படும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். 
	
	இவ்வீடமைப்பு திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்டு தற்காலிக இருப்பிடங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்லன. அதுவும், ஆரையம்பதி பிரதேசத்தில் வசித்து வருபவர்களென வாக்காளர் இடாப்புக்களில் உறிதிப்படுத்தும் குடும்பங்களில் இருந்து துகுதியானர்களை ஆரையம்பதி பிரதேச செயலாளர் தெரிவு செய்வார்.
	
	இவ்வீடமைப்பு திட்டக் காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை சிலர் வெளியிட்டாலும் பள்ளிவாசல்களுக்குரிய காணியே தவிர அது அரச மற்றும் தனியார் காணி அல்ல என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025