2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

4/21 தாக்குதல்: 51 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Freelancer   / 2022 ஜூன் 07 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும்  எதிர்வரும் 21ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல்  இன்று (07) செவ்வாய்க்கிழமை  உத்தரவிட்டார்.

சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள்  கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.

 இவர்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடியை சேர்ந்தவர்கள் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட  69 பேரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்குத் தாக்குதல் மேற்கொண்டனர். தற்போது இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள்  நீதவான் நீதிமன்றில் இருந்து மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன், 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.  15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய  51 பேர்   பொலன்னறுவை, அனுராதபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை,போன்ற சிறைச்சாலைகளில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  நாட்டின் சூழ்நிலை காரணமாக  அழைத்துவரப்படாத நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை பாதுகாப்புடன்  அழைத்துவரப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் இதன் போதே, விளக்கமறியல் உத்தரவை நீதவான் நீடித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X