Niroshini / 2021 ஜூன் 06 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சுன்னாகம் - மயிலங்காடு பகுதியில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர்கள் தாம் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலங்காடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 10 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
தொற்றாளர்கள் 10 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காக, சுகாதாரத் துறையினரால். இன்று பிற்பகல். அம்பியூலன்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
எனினும், தமக்கு தொற்று இல்லை எனவும் பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்த அவர்கள், அம்பியூலன்ஸ்களில் ஏற மறுத்தனர்.
அத்துடன், தம்மை வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம் என்றும். அவர்கள் எச்சரித்தனர்.
இந்த நிலையில், இராணுவத்தினரிடம் அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு வழங்கப்படவுள்ளது.`
28 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
35 minute ago