Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்பினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அயலவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் மேற்படி நபர் சைக்கிள் பம்பினால் தாக்கப்பட்டார்.
கொக்குவில் கிழக்கு மில் ஒழுங்கையைச் சேர்ந்த திலிப் ஜெயநாயகம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.
இது தொடர்பில் விசாரணை நடத்திய யாழ். மாவட்ட நீதிபதி, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு யாழ். மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
4 minute ago
44 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
44 minute ago
47 minute ago
52 minute ago