Freelancer / 2021 ஜூலை 31 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக மூடப்பட்ட மின்சக்தி அமைச்சு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த திங்கட்கிழமை முதல் அமைச்சு மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சு வளாகத்தை முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொற்றுக்குள்ளான இருவரும் நல்ல நிலையில் உள்ளனர் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தனிப்பட்ட ஊழியர் என்பதால், ஊழியருடன் தொடர்புடைய அமைச்சர் கொழும்பில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார்.
6 minute ago
6 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 minute ago
13 minute ago