Freelancer / 2021 ஜூலை 31 , பி.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் 20 இடங்களில் நாளை முதல் அஸ்ராஸெனகாதடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 728,460 அஸ்ராஸெனகா தடுப்பூசிகள், நாட்டுக்குக் கிடைத்தன.
ஜப்பானில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூஎல் 455 விமானத்தி்ன் மூலம் கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் ,கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை வந்தடைந்தன.
ஜப்பானில் இருந்து மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் எதிர்வரும் 7ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



6 minute ago
34 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
59 minute ago