J.A. George / 2021 ஜூன் 14 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வரை வீசும்.
இந்த பகுதிகளில் சில நேரங்களில் காற்றின் வேகம் 50 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
17 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
45 minute ago