2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

கொடியேற்றம்

Freelancer   / 2023 மே 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி. சகாதேவராஜா

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை  முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா  உற்சவம் எதிர்வரும்   யூலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் உதவிக் குரு கோபிநாத சர்மா உதவியுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

 ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள்  இடம்பெற்று ஆகஸ்ட் 02ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையை இருப்பதாக ஆலய பரிபாலன சபை வண்ணக்கர் டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.

வழக்கம்போல அன்னதானம் மற்றும்  பஸ் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .