Editorial / 2023 மே 09 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன், டி.சந்ரு
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் லொறியொன்று விழுந்து விபத்துக்குள்ளனாது.
குளியாப்பிட்டியவில் இருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றி பயணித்த லொறியே பாரிய வளைவில் தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு தேயிலை தோட்டத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது, லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர்களட இருந்துள்ளனர். எனினும், அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கிறனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவ்விடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு வேலிகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago