Editorial / 2021 ஜூலை 21 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}


திருப்பத்தூர் :
திருப்பத்தூர் மாவட்டம், செலந்தம்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் சின்னத்தம்பி, விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் சினையாக இருந்த ஒரு பசு நேற்று 2 பெண் கன்றுகளை ஈன்றது. இதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து காக்கணாம்பாளையத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர், அன்புசெல்வம் கூறுகையில், ‘வழக்கமாக பசுக்கள் ஒரு குட்டி மட்டுமே போடும்.
இதில் அரிய நிகழ்வாக சில பசுக்கள் 2 கன்றுகளை ஈன்றும்போது, ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் இருக்கும். ஆனால், இரண்டுமே பெண் கன்றுகளாக ஈன்றிருப்பது மிகவும் ஆச்சரியம்’ என்றார்.
4 minute ago
7 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
20 minute ago