Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பாக இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 294 ஓட்டங்களைப்பெற்றது. கம்ரன் அக்மல் 72 பந்துகளில் 74 ஓட்டங்களையும் ஆஸாட் சபீக் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஸ்டுவர்ட் புரோட் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ட்ரூ ஸ்ரௌஸ் 134 பந்துகளில் ஒரு சிக்ஸ,ர் 10 பௌண்டரிகள் உட்பட 126 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஜொனதன் ட்ரொட் 53 ஓட்டங்களைப் பெற்றர்.
இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராக இங்கிலாந்து வீரர் ட்ரௌஸ் தெரிவானார். 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்துஅணி 2-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
9 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
1 hours ago