Menaka Mookandi / 2010 நவம்பர் 15 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
தேசத்துக்கு நிழல் - தேசிய மர நடுகைத் திட்டத்தில் புத்தளத்திலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.என்.எம்.நஸ்மியின் தலைமையில் புத்தளம் நகர சபையில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவ்வி உட்பட நகர சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மரக் கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.
புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர்இ உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் கலந்து கொண்டனர். முள்ளிபுரம் பிரதேசம் மற்றும அஸன்குத்தூஸ் பாடசாலையிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




41 minute ago
8 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
8 hours ago
07 Dec 2025
07 Dec 2025