Niroshini / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பில், அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தி, வாகன இலக்கத்தகடு அச்சிட்ட வணிகர் ஒருவரை, விசேட அதிரடிப்படையினர், நேற்று (19) கைதுசெய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு – சிவநகர், 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து, தவறாக அச்சடிக்கப்பட்ட இலட்சினைகள், அதற்காக பயன்படுத்திய பொருள்கள், வான இலக்கத் தகடுகள் என்பவற்றை, விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்ட நபர், சான்று பொருள்களுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026