Ilango Bharathy / 2021 நவம்பர் 21 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்து வந்தனர்.
இதனையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் ” தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும்” என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், குற்றவாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ”ஆண்மை நீக்கம் செய்வது ஷரியத் சட்டங்களுக்கு எதிரானது என்றும், தூக்கில் இடுவதே சரியான தண்டனை எனக் கூறி இப்புதிய சட்டத்திற்கு பாகிஸ்தானின் எதிர்க் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago