Ilango Bharathy / 2022 நவம்பர் 02 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்ட காரணத்திற்காக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) கணக்கை, டுவிட்டர் நிரந்தரமாக முடக்கியிருந்தது.

இந்நிலையில் ”ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்குவது கருத்து சுதந்திரமே”எனக் கூறிவரும் உலகின் முன்னணி செல்வந்தரான எலான் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியுள்ள நிலையில் ட்ரம்ப் மீது போடப்பட்டிருந்த தடை நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் டுவிட்டரை கைப்பற்றியமை குறித்து எலோனுக்கு வாழ்த்துத் தெரிவித்த ட்ரம்ப் ”இப்போது தான் டுவிட்டர் புத்திசாலியிடம் உள்ளது. இதற்கு மேலும் தங்கள் நாட்டை வெறுக்கக்கூடிய இடதுசாரி மனநோயாளிகளிடம் டுவிட்டர் இருக்காது ”என்றும் தெரிவித்துள்ளார்.
21 minute ago
44 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
44 minute ago
59 minute ago
2 hours ago