George / 2016 ஜூலை 20 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று விதித்துள்ளது.
2006ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி அகுரஸ்ஸ - வல்பிட பகுதியில் 50 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதான சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணை மத்தறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி தமிக் தொடவத்தை, இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago