Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Sudharshini / 2016 ஜூலை 21 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களும், ஜூன் 4 ஆம் திகதி நெடுந்தீவுக்கு மேற்குப் பகுதியில் 1 படகுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களும், ஜூன் மாதம் 15ஆம் திகதி காரைநகர் கற்கோவளம் பகுதியில் 1 படகுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களும், இம்மாதம் 2 ஆம் திகதி நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும், இம்மாதம் 5 ஆம் திகதி காரைநகரில் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களுக்குமே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago