2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்; விசாரணைக்கு நாள் குறிப்பு

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு​வை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, உயர் நீதிமன்றம் நேற்று (17) தீர்மானித்தது.

அதன்படி, இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 மனுக்களை, செப்டெம்பர் 9ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் குழு தீர்மானித்தது.

உண்மைக் கண்டுபிடிப்பாளர்கள் அமைப்பினால், மேற்படி மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .