2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஒரு புலித் தொப்பி: மூவருக்கும் மறியல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான் 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை இலண்டனுக்கு அனுப்ப முயன்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியல், இம்மாதம் 22ஆம் திகதிவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டது.

பிணை மனுத் தொடர்பிலான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, கட்டளையிட்டிருந்தார். 

அதற்கமைய, தமது நிலைப்பாடு தொடர்பான அறிக்கையை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நேற்யை தினம் சமர்ப்பித்தனர். 

அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து, பிணை வழங்குவது தொடர்பில் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களான ஜேசுரத்னம் ஜெகசம்சன், மகாதேவா பிரசன்னா மற்றும் சுப்பிரமணியம் நகுலராசா ஆகியோரின் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டார். 

சந்தேகநபரான நகுலராசா, அரச புலனாய்வுச் சேவையில் இருந்தவர் எனவும் தற்போது அவர், 9 மாதங்களாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என பிணை மனுவில் கோரப்பட்டிருந்தது. 

நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக, புலிகளின் இலட்சிணை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை மிகவும் சூட்சுமமான முறையில் பொதியொன்றுக்குள் மறைத்து வைத்து, அதனை இலண்டனுக்கு அனுப்பமுயன்றமை தொடர்பில் விசாரிக்கப்பட்டு, வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.  

அதன் பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, சுப்பிரமணியம் நகுலராசா என்பவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X