2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பூஜித்தின் சத்தியப்பிரமாணத்தை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்துள்ள ​அடிப்படை உரிமை மனுமீதான விசாரணையில், தன் தொடர்பில் பொய்யான, குற்றவியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, முன்வைத்துள்ள சத்தியப்பிரமாணத்தை உடனடியாக அகற்றுவதற்கு கட்டளையிடுமாறு, சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, உயர்நீதிமன்றத்தில் இன்று (4) விசேட கோரிக்கையை முன்வைத்தார்.

உயர்நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களை மீறி, தான் உள்ளிட்ட பொறுப்பான நபர்கள் மீது  குற்றச்சாட்டுகளை சுமத்தி, இவ்வாறான சத்தியப்பிரமாணத்தை முன்வைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சட்டமா அதிபர், இது அரசியல் மேடை அல்லவென்றும் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .