2025 மே 05, திங்கட்கிழமை

முக்கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

George   / 2016 நவம்பர் 14 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னியா -கிளிக்குஞ்சு மலை பகுதியில் இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் வாளால் வெட்டி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான கன்னியா, கிளிக்குஞ்சுமலையைச் சேர்ந்த 34 வயதான ராஜலஷ்மனன் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், திருகோணமலை நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் விஷ்வந்த பெர்ணான்டோ முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே அவரை  இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X