Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் ஊடாக பிட்டிகல பொலிஸாரை அவமதித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, தேவையற்ற சொற் பிரயோகங்களால் பொலிஸாரை அவமதிக்கும் வகையில் பதிவுகளை இட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெய்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் சென்ற குறித்த இளைஞரை ஏதோ ஒரு குற்றச் செயலுக்காகக் கைதுசெய்திருந்ததுடன், பிறகு அவரது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலையான குறித்த இளைஞன் பேஸ்புக் ஊடாக பொலிஸாரை அவமதிக்கும் பதிவுகளை பதிவிட்டதால் பிட்டிகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026